Sunday, November 15, 2009

ABOUT THIS AYURVEDIC DEADDICTION MEDICINE

MODE OF ADMINISTRATION:

  • The drug is in the form of ''powder'', and administered by mixing the drug with food particles,with or without the knowledge of patient.
  • The patients who come voluntarily to stop alcohol by themselves,are getting very rapid results.
  • They are advised to take the medicine regularly in the morning with milk or any health drink.
  • ''Curry'',''Chudney'',''Coffee"' & ''Tea'' are the common vehicles for administration usually in the patients who are taking the drug without their knowledge.
  • No taste or smell is felt in the drug and it is the only great advantage in the cases who are being treated indirectly.
  • If the patient consume alcohol during treatment,vomiting or some unpleasant feeling occurs.
  • The family members or the person who is responsible to the patient is already explained about this difficulty.
  • After few days of drug administration, the patient use to leave their alcoholic friends and get a tendency to go their home in time.
  • This tendency is observed mostly in all of the cases.
  • Gradually in a short period of 7 to 10 days,the patient withdraw alcohol completely.
  • In this time, patient feels very tired and seek the reason for tiredness.Actually the reason of tiredness is due to the absence of alcohol in the circulation.
  • The patient is advised to take additional foods like FRUIT JUICES & VEGETABLE SOUP to maintain the energy balance.
  • The respondent of the patient is strictly advised not to open the secret of giving drug to him.It will collapse all the above positive results.

COURSE OF TREATMENT:

  • A minimum period of 3 months without fail is advised for very good results.
  • Even then the drug may be continued with intervals to get the maximum performance.
RESULTS:
  • More than 95% result is experienced in my patients.
  • Few patients who are not getting drugs regularly as prescribed are consuming alcohol later.... but not as past.

ADVICE:

  • It is advised to take the medicine as prescribed without fail.
  • If the medicine is properly administered,NO DOUBT WE WILL GET 100% RESULTS.

AYURVEDIC DE ADDICTION MEDICINE

  • Alcohol addiction is a dreadful disease in medical practice.
  • Common people like collie workers to higher officials are the victims.
  • Such addicts could not move a single day without alcohol.
  • Though they have adequate knowledge about the complications of their act, they are not able to think about the alcohol free world.
  • The alcohol addicts spend a lot of money for the same and not to their family even for essential things.
  • Their family members suffer a lot due to their act physically & mentally.
  • Most of the sufferer's family members seek a source to treat the addict wit out any harm to the individual.
  • Every medical system have individual medicine and method in treating the alcohol addict.
  • IN MY PERSONAL VIEW, AYURVEDIC MEDICINE IS SUPERIOR IN HEALING THE ADDICT.
  • I HAVE TREATED A LOT OF PATIENTS IN MY OWN CLINIC AND FOUND EXCELLENT RESULTS.
  • PATIENT GET 100% RESULT WHEN HE TAKES MEDICINE AS PRESCRIBED.

AL-SHIFA AYURVEDIC DE-ADDCTION MEDCINE Q & A

  • Question: Is there any risk with the herbal alcohol de-addiction drug if we give it to a person without his knowledge?
  • Answer: No.It is absolutely safe even it is given without the knowledge of the patient.

  • Question:How can we handle this medicine safely without the knowledge of the patient?
  • Answer:This medicine is colourless, odourless and tasteless.So it is very easy to give it to the patient by mixing it with the food particle like 'health drinks' or 'curry'.

  • Question:What will be the complication if any one of the family member or children swallow the medicine mixed food accidentally?
  • Answer:This medicine will not act in non-alcoholics.So nothing will happen if the medicine is swallowed by others even children.

  • Question:What will happen to the patient during the initial stage of treatment?
  • Answer:The patient hates alcohol in the first week itself and use to avoid their alcoholic friends and tries to go home in time.

  • Question:What will happen if the patient drinks alcohol during treatment?
  • Answer:During treatment,if alcohol is taken by the patient, it will remain in the digestive tract without any change.It may cause vomiting feel or un-usual upper abdomen discomfort or dumbness.

  • Question:Please tell the complication if the patient drinks regularly during the treatment?
  • Answer:The patient withdraw alcohol within 10-15 days of treatment.He cannot continue alcohol freely during treatment or later. No more serious complications will occur except gastric discomfort if alcohol is taken during treatment.

  • Question:What can we do if the patient is not responding to the medicine?
  • Answer:Very good question...!!! Resistant cases may not respond to this drug initially during treatment.In this situation the dosage of the medicine should be increased.Double dose per day(2 packs of medicine/daily) for 1 or 2 weeks will be helpful for getting a good response. The dosage can be reduced later.

  • Question:What is the reason for the tiredness felt by the patient during treatment?
  • Answer:Some of the patients may feel a little tiredness during treatment.The tiredness is only due to the sudden fall of alcohol content in the blood.

  • Question:How can we manage the patient when he is very tired during treatment?
  • Answer:Fresh fruit juices and vegetable soups will regain the patient from tiredness immediately.

  • Question:What will be the full course of treatment?
  • Answer:The patient must take medicine daily for at least 3 months .Depends upon the patient the duration of treatment may be increased.

  • Question:Will the patient use alcohol after treatment?
  • Answer:The patient withdraw alcohol 100% if he get the full course of treatment.The patient must be in observation by the family members later to maintain alcohol free life.'Rarely' some patients consume alcohol even after 3 months course.For such exceptional cases,treatment should be continued later with intervals(weekly once or twice) for a fruitful result.

  • Question:Will the patient get personality changes after treatment in addition to withdrawal of ALCOHOL?
  • Answer:Sure..!!!The patient is humble in their activities after treatment and sincere with their routine works They use to avoid their alcoholic friends and keep to spend with their family members.

COMMON Q & A

Addiction: Frequently Asked Questions

.. Addiction is a disease
.. Abstinence is the only method to control addiction
.. Treatment will help in controlling addiction

You ask questions and we'll try to provide answers. Here are some questions people have been asking us. If you don't see a question listed below, or need more explanation or clarification, send us an email. We'll be glad to provide an answer.

What are the common misunderstandings about addiction?

  1. Addicts are bad, misbehaved, lazy or useless people
  2. Addicts should not be treated unless they are violent or fall in gutters and create problems in social setting
  3. People who do not abuse/drink continuously, that is throughout the day, don't have a problem
  4. People who are into substance abuse can be left alone if they earn well and work well
  5. Alcohol, ganja are used in festivals, while cough syrups etc. are medicines, therefore they can be consumed without any harm
  6. Alcohol improves appetite and sexual libido
  7. Smoking filtered cigarette and drinking foreign liquor is fashionable and an occupational etiquette

Is hospitalization always necessary?

Most of the cases not needed.we are not permit the addicts in hospitalizations.

What is recovery?

A person is on the recovery path when he abstains from or stops the use of addictive substance completely, examines and improves self-thinking, feeling and behaviour patterns; that is he tries to make reasonable changes in his lifestyle. The recovered addict also starts rehabilitating himself in family, job, education and career. He also takes efforts in learning ways to cope with free time, money and relationships, that is channelling energies into positive ways.

What is detoxification?

It is a process in which the patient is administered drugs, diet and a change of atmosphere to break the routine of addiction. Required medical and counselling support is also provided as withdrawal symptoms (commonly called "turkey") like disorientation, sleeplessness, restlessness often occur during detoxification.

What does a your ayurvedic center do?

A rehabilitation center helps addicts in the recovery process.

we are giving them ayurvedic medicines for the aversion towards alchohol and smoke and drugs

What happens after treatment?

Persons 100 % free from addictions with the full course

What is AA, NA?

AA is Alcoholics Anonymous, a self-help group started by and for the alcoholics. (The story of birth of AA).
NA is Narcotics Anonymous, a self-help group for users of narcotic drugs like brown sugar, charas, ganja, cocaine etc.
These groups have free membership, they provide anonymity and a sense of belonging to their members.

What is the role of family members?

Role of family members/caregivers in helping the addict is very crucial.

  • They need to accept that the addict is ill, and should accompany him for treatment like any other patient
  • They need to play a remedial role as prescribed by the counsellor
  • Changing their thinking, feeling and behaviour patterns is necessary
  • It is important to play a vigilant role in case the patient slips back to addiction
  • The family should try and lead a normal life within the circumstances

What is sobriety?

Sobriety is not merely abstinence from the substance but a qualitative change in attitude regarding self, others and the world. It also includes a sense of self-development and effort towards active reinstatement of self in the social mainstream.

Can an addict lead a normal life?

Yes, and he can even progress and help other addicts during their treatment and recovery. He can restart his education, career plans, family reunification etc. He should however always completely abstain from all addictive, dependency-producing substances as there is a danger of relapse of some abuse or shift to a new abuse.

What others say of addiction?

  1. Addiction is a conditional response
    - Behavioural psychologist
  2. Addiction results from learned behaviour
    - Cognitive psychologist
  3. Addiction results from dysfunctional family
    - Social psychologist
  4. Addiction is a permanent, progressive, cunning, baffling and powerful disease, marked by mental obsession and physical craving
    - AA / NA member
  5. Addiction is either substance abuse or substance dependency
    - As classified in Diagnostic and Statistical Manual IV
  6. Addiction is a biological disease
    - A Research Psychiatrist
  7. Addiction is a neurotic self-destructive behaviour resulting due to Low Frustration Tolerance (LFT) or themes such as - addiction equals worthlessness, addiction as a coping mechanism, addiction as a result of demand for excitement etc.
    - REBT Therapist
  8. Addiction is generally applied co-habits that are not needed for life and also are hazardous to health
    - Mental Health Terms Glossary by Mark Dombeck, PhD
  9. Addiction is best understood as an individual's adjustment, albeit a self-defeating one, to his or her environment. It represents a habitual style of coping, albeit one that the individual is capable of modifying with changing emotional and life circumstances
    - Stanton Peel
  10. Addiction is a feeling of "I shall continue it as long as I can" despite having devastating effects on oneself or others
    - Arnot Oregon Medical center
  11. Although there are many kinds of addictions, no matter what the addiction is, every addict engages in a relationship with an object or event in order to produce a desired mood change
    - Mr. Craig Nakken, author of "Addictive Personality"
  12. Maladaptive genes that produce and maintain the craving for the addictive substance(s) and as a result, alter the metabolism in "reward" centers within the central nervous system
    - The Biogenic Model
  13. Drug dependence is a state, psychic and sometimes also physical, resulting from taking a drug, characterised by behavioural and other responses that always include a compulsion to take a drug on a continuous or periodic basis in order to experience its psychic effects, and sometimes to avoid the discomfort of its absence. Tolerance may or may not be present. A person may be dependent on more than one drug
    - WHO ICD 1990 (p. 1131)
  14. Addiction is maladaptive pattern of spirituality
    - Religious Leaders
  15. Addiction is anaesthesia
    - Daniel Laguitton

During the sharing at AA, it is often heard that there are 16000 reasons for drinking. Similarly, there are different and divergent definitions of addiction. At least fifteen of such views are given above. We at AL-SHIFA DEDADDICTION are not interested in defining the term Addiction. However, for the purposes of treating addiction we follow a simple elaborate statement so that the goal of treatment can be achieved.


madatyaya

Deaddiction Therapy

Uddharedaathmanaathmaanam naathmaanamvasaadayeth|
Athmaiva hyathmano bandhurathmaiva ripuraathmanaha ||

This means "One should save oneself by oneself; one should not lower oneself. For oneself is verily one's own friend; oneself is verily one's own enemy."

Man has been trapped in the web of vices such as alcohol, drugs, tobacco etc. Ayurveda offers a variety of treatments and therapies for deaddiction from these vices. During such treatment ayurveda focuses more on the mental aspect of the problem, there by strengthening the mind.

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!





மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.



மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!


குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?



இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?



பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் ?ஆம்? என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.

___

மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?



சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் ?குறுகியகால விளைவுகள்? மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் ?தவறான கருத்துக்கள்? எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.

ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவை...?



1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.


குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.

___


குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள் எவை.?

1. சோதித்துப் பார்க்கும் நிலை...


ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை...

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

3. சார்பு நிலை...

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

4. தீவிரமடைந்த நிலை

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.



மதுவின் பிடியில்!!

மதுவின் பிடியில்!!!

மின்னஞ்சல்அச்சிடுகPDF

ஒழுக்கமும் வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடே சென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண் ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன் வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, "நீ மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்." என்று சொன்னது.



beer_invitationஇளைஞன் கொஞ்சம் யோசித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் பணியோ அவசரமானது, முக்கியமானது. எனவே இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை அவன் செய்துதான் ஆகவேண்டும். ஒழுக்கம் நிறைந்தவன் ஆதலால், அவன் பெண்ணை பலாத்காரம் செய்வதை அவன் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஒரு வீரனால் ஒன்றுமறியா ஒரு பச்சிளங்குழந்தையை எப்படிக் கொல்ல இயலும்? எனவே மதுவை அருந்திவிடுவதே கொடுக்கப்பட்ட மூன்றில் எளியது என்று அவனுக்குத் தோன்றியது. சாத்தானிடம் அவன் தன் முடிவைச் சொல்லிவிட்டு, மதுப்புட்டியை எடுத்து அருந்தினான். மது உள்ளே சென்றதும், புத்தி தடுமாறியது. போதையில் மோகவெறி ஏறவே அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தான். இடையில் குழந்தை அழுது, அவனைத் தொல்லை செய்தது. உடனே அவன் வாளால் அக்குழந்தையை வெட்டிக் கொன்றுவிட்டான். சாத்தான் தன் வேலை முடிந்த திருப்தியுடன் சென்றது.

மதுவின் தீமையை விளக்கக் கூறப்படும் கதை இது. மதுவின் பிடியில் சிக்கிய மனிதர்கள் தமது மனநலம், உடல் நலம் இரண்டையும் இழப்பதோடு, சமூகத்தில் தனக்குள்ள மதிப்பையும் இழக்கின்றனர்.

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள்:
மது அருந்துபவர்கள் சொல்லும் பொதுவான காரணங்கள், 'எனக்கு அலுவலில் பிரச்னை', 'வீட்டில் குழப்பம்', 'என் துயரத்தை மறக்கக் குடிக்கிறேன்', 'உடல் அலுப்பை மறக்கக் குடிக்கிறேன்' என்பன. ஆனால் உண்மையில் நமது மனம் அந்தப் போதையின் பாதையில் செல்ல விரும்புகிறது. அதற்கு இதுவெல்லாம் ஒரு நொண்டிச் சாக்கு. பார்க்கப்போனால், மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் நாம் மறந்திருக்கும் பிரச்னைகள் நாம் நனவுலகிற்கு வந்தவுடன் இன்னும் அதிகமாகத் தாக்கும். நம்மை மேலும் தனிமையாய் உணரச் செய்யும். அதிகமாக மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மது கொஞ்சம் கொஞ்சமாக நமது சிந்தனைத் திறனை, மூளையின் செயற்பாட்டை மழுங்கடிக்கும். உடலிலும் மனத்திலும் மதுவினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் நாம் அதன் பிடியில் இருந்து விலகிக் கொள்ளலாம். நமது நெருங்கிய உறவு மற்றும் நண்பர்கள் இதற்கு ஆட்பட்டிருந்தால் அவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை மீட்க முயலலாம்.

மதுவை அருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால் கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளை இயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறுகிறது. நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன.எனவே மறதி ஏற்படுகிறது.

தொடர்ந்து மது அருந்துகையில், மேலும் நிலைமை மேலும் மோசமாகிறது. இரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால் உடனடியாக ஏற்றுச் சீரணித்துக்கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை Blood Alcohol Count (BAC) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரை இருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு இவை ஏற்படும் வாய்ப்புகள் மிக உண்டு.

தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடம்பில் ஆல்கஹாலுக்கு எதிரான தாங்கும் சக்தி (Tolerance) அதிகரிக்கிறது. அதாவது குறைந்த அளவு ஆல்கஹால் போதையை ஏற்படுத்துவது இல்லை. எனவே மேலும், மேலும் குடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுவிடுகிறது. அதிக அளவு மது உடல் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, போதையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அதிக அளவில் விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். கீழே விழுதல், தீ விபத்து, நீரில் மூழ்கிவிடுதல், மோட்டார் வாகனங்களை ஓட்டும்பொழுதும், இயந்திரங்களை இயக்கும்பொழுதும் விபத்துக்குள்ளாகுதல் இவை எல்லாம் மது அருந்துபவர்களுக்கிடையேதான் அதிகம்.

உடலில் அதிகமாகும் ஆல்கஹாலின் அளவு நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். சிறு சிறு உடல் உபாதைகளுக்கு எதிராகப் போராடும் சக்தியைக் கூட உடல் இழந்துவிடுகிறது. சளித்தொல்லை அதிகமாகிறது. உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி உடலுக்குத் தரவேண்டிய உறுப்புகள் மெல்ல மெல்லச் செயல் இழக்கின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆனால், மதுவில் இருக்கும் கலோரிகள் உடனடியாக உடலில் கலந்துவிடுவதால், உடல் பருமன் நாளடைவில் மிகவும் அதிகரித்துவிடக் கூடும். உடலில் உள்ள நீர்ச்சத்தினை மது குறைக்கிறது. இதனால் தோல் சுருங்கியும் வறண்டும் போகத்தொடங்கும். அது மட்டுமின்றி, இரத்த நாளங்கள் சுருங்கவும், அவற்றில் வெடிப்புகள் உண்டாகவும் மது காரணமாகி விடுகிறது.

அதிக அளவு மது அருந்துவது, அல்லது தொடர்ந்து மது அருந்துவது, நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். நரம்பு மண்டலப் பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். மாரடைப்பு, புற்றுநோய் இவற்றின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம்.

அது மட்டுமல்ல. குடிப்பவர்கள் தங்கள் நிதானத்தை இழந்துவிடுவதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கின்றன. சமூகத்தில் கெட்ட பெயரும் உண்டாகிறது. மானம் மரியாதை இவை காற்றில் பறக்கின்றன. இயக்குநர் சிகரம் திரு. பாலசந்தரின் சிந்து பைரவி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? குடியின் தீமையை அதைப்பார்த்தவர்கள் எல்லாரும் அவசியம் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய பல கேடுகள் உண்டாக்கக்கூடிய 'குடி கெடுக்கும்' குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம். குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுடன் மீண்டும் இப்பகுதியில் சந்திப்போம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது

"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா? --


Más opciones 19 mar, 10:24
"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?
--------------------------------------------------------------------------- -----
மனிதன் இந்த மண்ணில் தோன்றிய காலத்தி லிருந்தே மது அருந்தும் பழக்கமும்
இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் மேற்கிலுள்ள கோடின்
தேபே என்ற சுமேரிய ஊரில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள்
ஒயினும், பீரும் அருந்தியிருக் கிறார்கள் என்பது, அங்கிருந்து
அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மட் பாண்டங்கள் மூலம்
தெரியவந்துள்ளது.

மெசபடோமியா நாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து அவற்றிலிருந்து மது
தயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள்
இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன் படுத்தி வந்தாலும், பொழுது
போக்கிற்காகவும் பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும்
சட்டத் தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்பு களில், அதை எவ்வாறு
அருந்தவேண்டும், எப்படி விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள்
இருந்திருக்கின்றன. கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய
மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய
பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாக இருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டு பெர்சபோலிஸ் நகரில் இருந்த
அரச மாளிகை தீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க்
என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன் மதுநோய்க்கு அடிமை
யாகித்தான் இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால்
ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக
வரலாறு கூறுகிறது.

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்,
முதியோர்களைவிட இளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட
அலுவலகத்தில் பணி யாற்றுவோரும்தான் அதிகம் எனத் தெரிகிறது.

அமெரிக்க மக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில்
38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர்
ஆய்வு.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர்
ஆய்வின்படி, குறிப்பிட்ட சில சமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும்,
பெண்களில் 20 சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள 400 பேர் களிடம் "நீங்கள் எதற்காகக்
குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:

# 32.75 % பேர் - போதைக்காக

# 24.00 % பேர் - தொழில் களைப்பைப் போக்கிக்கொள்ள.

# 22.25 % பேர் - கவலைகளை மறக்க.

# 05.00 % பேர் - இரவில் நன்றாகத் தூங்க.

# 04.50 % பேர் - உடல் உபாதைகளை மறக்க.

# 03.75 % பேர் - உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள.

# 03.75 % பேர் - காதல் தோல்வியை மறக்க.

# 02.75 % பேர் - பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.

# 01.25 % பேர் - மனைவி தரும் தொல்லையை மறக்க.

# 01.00 % பேர் - உடல் உறவுகொள்ள.

மது அருந்தும் அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில்
எடுக் கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது. அங்கே 10 கோடி பேர்
மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால்
பாதிக் கப்பட்டுள்ளனர். அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும்
கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மது சம்பந்தமான நோய் களினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்று கருதப் பட்டு வந்தது. 1956ல் தான்
'தீவிர மதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது "அமெரிக்க
மருத்துவ சங்கம்".

ஜோக்:

"குடிப்பழக்கத்தை விட்டுடச்சொன்னார் டாக்டர்னு
சொன்னீரே......விட்டுட்டீரா?"

"ம்....ம்...ம்...விட்டுட்டேன்............அந்த டாக்டர்கிட்ட போறத!"

(மற்றவை 'அடுத்த ரவுண்டில்')

- கிரிஜா மணாளன்


புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை

புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை!


1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



2)
நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு
நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



4)
நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை
எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



5)
நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார
வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள்
சிந்தித்தது உண்டா?



6)
நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த
இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது
என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



7)
நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும்,
பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள்
சிந்தித்தது உண்டா?



8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



9)
நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட
உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?



10)
நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை
குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள்
சிந்தித்தது உண்டா?



11)
நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி
மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை
உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



13)
புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள்
மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


14)
நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு
கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?



15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?



16)
புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால்
இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள்
சிந்தித்தது உண்டா?



17)
புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து
கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து
வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள்
சிந்தித்தது உண்டா?



18)
புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற
உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


19)
உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு
தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள்
சிந்தித்தது உண்டா?


20)
புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை
இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம்
செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும்
அரக்கனிடமிருந்து விடுதலை பெருங்கள்.

மதுவை மறக்க முடியுமா

மதுவை மறக்க முடியுமா?


குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.

இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது

குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகளைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதையும்
இங்கே நினைவுகூர்வோம்.

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றார் முகத்துக் களி."

"நாணெனும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு."

(குடிப்பழக்கம் உள்ளவனை பெற்ற தாயும் விரும்பமாட்டாள். சான்றோர் அவனை
வெறுப்பர். நாணம் அவனைவிட்டு நீங்கும். எனவே குடிப்பழக்கம் என்பது
பெருங்குற்றத்துக்குச் சமமானது.)

"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர்."

(மது அருந்துவதற்கும், நஞ்சு உண்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இருவருமே அறிவிழப்பதால், இருவருமே இறந்தவர்கள்தான்.)

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று."

"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு."

(கள்ளுண்டு மயங்கியவனைத் திருத்துவது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம்
பிடித்துக்கொண்டு, நீரில் மூழ்கித் தேடுவது போன்றது. திருத்த
முயல்பவனிடம் உள்ள அறிவும் அழியும்.
ஒருவன் கள்ளுண்ணாதபோது, அதை உண்டவன் போடும் ஆட்டத்தைக் கண்டாவது
திருந்தவேண்டாமா?)

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

மனித உடலில் உள்ள "ஏடிஎச்' ஜீன்களே, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் உருவாக காரணம் என, முன்னர் கண்டறியப் பட்டுள்ளது. ஆனால், இந்த "ஏடிஎச்' ஜீன்களில் உள்ள இரண்டு பிரிவுகள், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிப்ப தாக தற்போது கண்டறியப் பட்டுள்ளது.இந்த வகை ஜீன்களை கொண்டிருப்பவர் களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.வாய் சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட, மரபு கோளாறுகளும், வாழ்க்கை முறையுமே காரணம்.

குறிப்பாக, நீங்கள் குடிக்கும் மதுவை உங்களின் உடல் எப்படி கிரகித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. நீங்கள் அருந்தும் மதுவை உங்களின் உடல் வேகமாக கிரகித்துக் கொண்டால், உங்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதற்கு மாறான நிலைமை உருவானால், வாய் புற்றுநோய் ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு ஜீன்களும் உங்கள் உடலில் சேரும் மதுவின் தீமைகளை குறைத்து அதை வேகமாக கிரகித்துக் கொண்டால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். அதற்கு மாறாக நிகழ்ந்தால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம்.இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்