Sunday, November 15, 2009

'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!

குடிப்பழக்கம் அதிகமான, குடிக்க வேண்டும் என்று உணர்வுள்ள நண்பர், குடிபழக்கத்திற்கு அடிமையான நண்பர் அல்லது உறவினருக்கு எப்படி நம்மாலான உதவிகளை செய்ய முடியும்?



நமக்கு தெரிந்தவர்களில் யாராவது குடிக்க வேண்டும் அல்லது அளவுக்கு
அதிகமாகக்குடித்து தன் வாழ்க்கையையும், தன்னை சுற்றி இருப்பவர்களின்
வாழ்க்கையையும் நாசமாக்கவேண்டும் என்கிற உணர்வுடன் இருப்பவர்களை,
அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சிப்பதே நமது முதல் செயலாகும்.
தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களை, நமக்கு
தெரிந்தவர்கள் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம்
செய்யலாமே.

அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்பது மிகவும் சிறந்த செயல். எதனால்
அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுக் கண்டறிய வேண்டும். குடிக்க
வேண்டும் என்கிற உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ
தேடுவதில்லை. அவர்களை நமது வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு
சுலபமானாதும் இல்லை. அவர்களுடைய மற்றொரு முகத்தை காண்பிக்கவும், ஒரு
சிலர் அவர்களுடைய மன ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு mask
அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

கேட்பது (listening)- உண்மையாகக் கேட்டல்(true and sincere) - அவ்வளவு
எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகக் கருத்துக்கூறுவது,
அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுவது - என்ற நமது உள்ளுணர்வை
நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது
மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை அவர்களது
கோணத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும், ...not from our view.


குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய
சில அம்சங்கள்

அவர் எதற்காக இதை செய்கிறார்?

அவர் எந்த கோணத்தில் வாழ்க்கையை நோக்குகிறார்?

எந்த விதத்தில் அவரது மனம் நோகடிக்கப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது?

தன் சுய நினைவை இழப்பதற்காக இந்த செயலை செய்கிறாரா?

வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால் இதில் ஈடுபடுகிறாரா?

மனதில் தீராத ஒரு பயத்தினால் செய்கிறாரா? அல்லது ஒரு தமாஷுக்கு செய்கிறாரா?

ஒரு நம்பிக்கையான, அக்கறைகாட்டும் ஒருவரை நாம் தேர்வு செய்துக்

கொள்ளவேண்டும். வாழ்க்கையின் நல்ல கணங்களை எடுத்துக்கூறலாம்.

அவருக்கு நிறைய importance கொடுத்து அவர் பிரச்னைக்கு தீர்வுக்காண sincere
ஆக முயற்சிக்கவேண்டும்..

குடிப்பழக்கத்தால் வரும் பின்விளைவுகள், குடும்பத்தாருக்கு அதனால் ஏற்படும்

வேதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லலாம்..

No comments:

Post a Comment